அன்புள்ள வசந்த்,
என் பெயர் ரங்கநாதன்
உங்களின் இந்த முயற்சி நல்லதொரு தொடக்கம். எச்ஐவி பற்றிய விவரங்களை விழிப்புணர்வை பெண் பதிவர் ஒருவர் செய்து கொண்டிருந்தார். அவரை ஏனோ பல நாட்களாக காணவில்லை. சமீபத்தில் நான் என் கையில் பச்சை குத்திக் கொண்டேன். ரோட்டோரத்தில் இருக்கும் ஒருவரிடம் பச்சை குத்தியதால், நண்பர்கள் பலர் என்னை எச்ஐவி நோயின் அபாயத்தை கூறி பயமுறுத்துகின்றனர். பச்சை குத்தும் போது எச்ஐவி பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
என்னை தொடர்பு கொண்டதற்கு நன்றி திரு இரங்கநாதன்.
பச்சைகுத்துவற்கு உபயோகப்படுத்தப்படும் ஊசி/கருவி சுத்தம் செய்யப்படவில்லையென்றால், எச்ஐவி பரவுவதற்கான அபாயம் இருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உபயோகப்படுத்தப்பட்ட ஊசியை/கருவியை சுத்தம் செய்யாமல் அடுத்தவருக்கு உபயோகப்படுத்தினால் எச்ஐவி கிருமி பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் பச்சை குத்துபவர்களாக இருக்கட்டும், மருத்துவர்களாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் நன்றாக சுத்தம் செய்த அல்லது ஒரு முறை மட்டுமே பயன் படுத்தப்படும் ஊசிகளை உபயோகப்படுத்துவது சாலச் சிறந்தது
எச்ஐவி மட்டுமில்லாமல் இரத்தித்தினால் பரவும் மற்ற நோய்கள் பரவும் ஆபத்தும் இருக்கிறது. உங்களை அச்சுறுத்த கூறும் பதில் இல்லை இது. நீங்கள் எதற்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எதுவும் இருக்காது என்பதை நம்புவோம்.
மேலும் விவரங்களுக்கு askhivinfo@gmail.com